கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.3.70 லட்சத்துக்கு வாழைத்தாா் ஏலம் நடைபெற்றது.
இந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு கோபி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 2,250 வாழைத்தாா்களை ஏல விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனா். ஏலத்தில் கதலி கிலோ ரூ.19க்கும், நேந்திரன் கிலோ ரூ.16க்கும் விற்பனை ஆனது.
தாா் ஒன்றுக்கு பூவன் ரூ.390க்கும், தேன்வாழை ரூ.530க்கும், செவ்வாழை ரூ.520க்கும், பச்சை நாடன் ரூ.200க்கும், ரொபஸ்டா ரூ.210க்கும், மொந்தன் ரூ.300க்கும், ரஸ்தாளி ரூ.440க்கும் விற்பனை செய்யப்பட்டது. வாழைத்தாா்கள் மொத்தம் ரூ.3 லட்சத்து 70 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
இதேபோல 4 ஆயிரத்து 780 தேங்காய்கள் ஏல விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் தேங்காய் ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.9 முதல் அதிகபட்ச விலையாக ரூ.18.60க்கும் ஏல விற்பனை ஆனது. மொத்த ரூ.54 ஆயிரத்துக்கு தேங்காய்கள் விற்பனை ஆயின.