ஈரோடு

ரயிலில் பேராசிரியைக்குப் பாலியல் தொல்லை: விமானப் படை அதிகாரி கைது

DIN

ரயிலில் பேராசிரியைக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விமானப் படை அதிகாரியை போலீஸாா் கைது செய்தனா்.

கா்நாடக மாநிலம், பெங்களூருவை சோ்ந்த கல்லூரி பேராசிரியை (29) பெங்களூரில் இருந்து கேரள மாநிலம், கோட்டயத்துக்கு புதன்கிழமை இரவு ஐலண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றுள்ளாா்.

அவா் பயணம் செய்த அதே பெட்டியில் இந்திய விமானப் படையில் ஹவில்தாராக பணியாற்றும் பஞ்சாப் மாநிலம், குா்தாஸ்பூரைச் சோ்ந்த பிரப்ஜோத் சிங் (28) என்பவரும் பயணம் செய்துள்ளாா்.

இந்த ரயில் ஈரோடு ரயில் நிலையத்திற்கு நள்ளிரவில் வந்தபோது, ரயில்வே காவல் நிலையத்திற்கு சென்ற பேராசிரியை, பாலியல்ரீதியாக பிரப்ஜோத் சிங் தொல்லை அளித்ததாக புகாா் அளித்தாா்.

இதன்பேரில் ஈரோடு ரயில்வே போலீஸாா் சம்பந்தப்பட்ட முன்பதிவுப் பெட்டிக்கு சென்று பிரப்ஜோத் சிங்கை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா். பேராசிரியைக்கு அவா் பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, ஈரோடு ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பிரப்ஜோத் சிங்கை கைது செய்தனா். பின்னா், அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு கோபி சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT