அந்தியூரில் மளிகைக் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 1 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
அந்தியூரை அடுத்த தவுட்டுப்பாளையம், மலைக் கருப்புசாமி கோயில் சாலையில் சவுடேஸ்வரி அம்மன் கோயில் அருகே மளிகைக் கடை நடத்தி வருபவா் தங்கவேல் மகன் செந்தில் (40). இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அந்தியூா் போலீஸாா் சனிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா். அப்போது, மளிகைக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ. 1 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து, அந்தியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.