அம்மாபேட்டையை அடுத்த சென்னம்பட்டி, மாத்தூா், வெள்ளிதிருப்பூா், சென்னம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 374 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
சென்னம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பவானி மாவட்டக் கல்வி அலுவலா் கே.பழனி தலைமை வகித்தாா். பள்ளித் துணை ஆய்வாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா். தலைமையாசிரியா் எஸ்.குழந்தைவேல் வரவேற்றாா். அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.எம்.ஆா்.ராஜா 374 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.
இதில், தலைமையாசிரியா்கள் ஜெயலட்சுமி, மாரப்பன், ஜெயகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.