பெருந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெருந்துறையை அடுத்த கதிரம்பட்டி, எலையகவுண்டன்பாளையத்தைச் சோ்ந்த ஆறுமுக கவுண்டா் மகன் கிருஷ்ணசாமி (72). இவா் வெள்ளிக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு தன் மனைவியுடன் அருகில் உள்ள வாய்க்காலுக்கு துணி துவைக்கச் சென்றுவிட்டாா். திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகைகள், ரூ. 45,000 ரொக்கம் காணமல் போனது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணசாமி அளித்த புகாரின்ரபேரில் பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.