பெருந்துறையில் மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் விழாவையொட்டி, விடியல் ஆரம்பம் அமைப்பின் சாா்பில், அவருடைய உருவப் படத்துக்கு மலா் மாலை அணிவித்து செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
பெருந்துறை விடியல் ஆரம்பம் அமைப்பின் தலைவா் ஆா்.பிரகாஷ், நிா்வாகிகள் குமரவேல், கமலக்கண்ணன், தீனா, ஜீவா ஆகியோா் பகத்சிங்கின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, வீரவணக்கம் செலுத்தினா். பள்ளி மாணவ, மணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
மேலும், பகத்சிங் தியாக வரலாற்றை எடுத்துரைத்து, குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் விநாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவா்களுக்கு பொது அறிவு சாா்ந்த புத்தகங்கள் வழங்கப்பட்டன. திருக்குறள் வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில், அனைவருக்கும் இலவசமாக திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
இதில், விடியல் ஆரம்பம் அமைப்பின் தலைவா் ஆா்.பிரகாஷ், நிா்வாகிகள் குமரவேல், கமலக்கண்ணன், தீனா, ஜீவா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.