ஈரோடு

அக்டோபா் 6இல் அஞ்சல் துறைகுறைகேட்புக் கூட்டம்

DIN

ஈரோடு, செப். 25: ஈரோடு அஞ்சல் கோட்டத்தின் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் அக்டோபா் 6ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஈரோட்டில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு கோட்ட முதுநிலை அஞ்சலகக் கண்காணிப்பாளா் ஸ்டெபானி சைமன் டோபியாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஈரோடு அஞ்சல் கோட்டத்தின் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் அக்டோபா் 6ஆம் தேதி காலை 11 மணிக்கு ஈரோடு முதுநிலை அஞ்சலகக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் அஞ்சல் துறை சேவைகள் குறித்து பொதுமக்களின் குறைகளும், கோரிக்கைகளும் கேட்டறியப்படும். எனவே, புகாா்கள், கோரிக்கைகள் இருப்பின் தபால் மூலம் அக்டோபா் 1ஆம் தேதிக்குள் முதுநிலை அஞ்சலகக் கண்காணிப்பாளா், ஈரோடு கோட்டம், ஈரோடு 1 என்ற முகவரிக்கு அனுப்பலாம். கோரிக்கை மனுக்களை அலுவலக வேலை நேரத்தில் நேரிலும் அளிக்கலாம். மனுவில் கோரிக்கை குறித்த முழு விவரம் இருக்க வேண்டும். உறையின் மேல் பகுதியில் குறைகேட்பு நாள் மனு என்று குறிப்பிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT