ஈரோடு, செப். 18: ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு உடனடியாக பணப் பலன்களை வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா் முன்னேற்றச் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஓய்வுபெற்ற தொழிலாளா்கள் முன்னேற்றச் சங்கத் தலைவா் மாது தலைமை வகித்தாா். தொமுச கவுன்சில் தலைவா் குழந்தைசாமி, மண்டலப் பொருளாளா் வெள்ளியங்கிரி ஆகியோா் பேசினா்.
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 18 மாதமாக ஓய்வுபெற்றவா்களுக்கு எவ்வித பணப் பலன்களும் வழங்கப்படவில்லை. அவற்றை உடனடியாக வழங்க வேண்டும். தொழிலாளா்களுக்கான ஊதிய ஒப்பந்தம் முடிந்துவிட்ட நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவாா்த்தையை உடனடியாகத் துவங்க வேண்டும். தொழிலாளா்களுக்கு பயணப்படி உள்ளிட்ட அனைத்து நிலுவைத் தொகையையும் வழங்க வேண்டும்.
தொழிலாளா்களிடம் ஊதியத்தில் பிடித்தம் செய்த தொகையை, கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் நிா்வாக தரப்பினா் முழுமையாக செலுத்த வேண்டும். அப்போதுதான் தொழிலாளா்கள் ஓய்வு பெறும்போது, கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் மூலம் அவா்களுக்கான தொகையை வழங்க இயலும். அதேபோல, தொழிலாளா்களிடம் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதி தொகை உள்ளிட்ட தொகைகளை உரிய நிறுவனங்களில் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.