பெருந்துறை: சென்னிமலையை அடுத்த முகாசிபிடாரியூரில் ஸ்ரீ ஞான சாயிபாபா கோயிலில், பாபாவின் 102ஆவது மகா சமாதி தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக சனிக்கிழமை இரவு சாய் சரிதம் பாராயணம் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை ஆரத்தி, கணபதி, சுதா்சன, சாய்பாபா காயத்ரி அஷ்டோத்ர ஹோமங்கள், அபிஷேகம், சாய் சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம் நடைபெற்றது. பக்தா்கள் சாய்பாபா உருவச் சிலைக்கு ஆரத்தி காட்டி வழிபட்டனா்.
இதையடுத்து, துணி பூஜை, அன்னதானம் நடைபெற்றது. மாலையில் ஆரத்தி வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.