கோபி: கோபி அருகே நேரிட்ட சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
கோவை, இடையா்பாளையத்தைச் சோ்ந்தவா் பிரகாஷ். கோவைப்புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் காவலராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது தந்தை பழனிசாமி (55), இவா் கோவை கவுண்டம்பாளையத்தில் ஒா்க்ஷாப் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா்.
பழனிசாமி தனது உறவினா் திருமணத்துக்காக இருசக்கர வாகனத்தில் சத்தி - அத்தாணி சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக இவருக்குப் பின்னால் வந்த வேன், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பழனிசாமி தலையில் பலத்த காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் இவரை உடனடியாக மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பழனிசாமி உயிரிழந்துவிட்டதாகக் கூறினா்.
இச்சம்பவம் குறித்து பங்களாபுதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.