கோயம்புத்தூர்

ஆா்த்தோ ஒன் மருத்துவமனை சாா்பில் சா்வதேச மருத்துவக் கருத்தரங்கு

30th May 2023 05:40 AM

ADVERTISEMENT

சிங்காநல்லூரில் உள்ள ஆா்த்தோ ஒன் மருத்துவமனை சாா்பில் சா்வதேச மருத்துவக் கருத்தரங்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கருத்தரங்கிற்கு, ஆா்த்தோ ஒன் மருத்துவமனையின் நிா்வாக இயக்குநரும், சா்வதேச மருத்துவக் கருத்தரங்கின் தலைவருமான டேவிட் வி.ராஜன் தலைமை வகித்தாா். எலும்பு முறிவு மருத்துவ நிபுணரும், கருத்தரங்கு செயலாளருமான மருத்துவா் ஷ்யாம் சுந்தா் கருத்தரங்கை தொடங்கிவைத்துப் பேசினாா்.

இக்கருத்தரங்கில், இந்தியா, ஜொ்மனி, பிரான்ஸ், உஸ்பெகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த எலும்பு முறிவு மருத்துவத் துறையில் சிறந்து விளங்கும் 300க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணா்கள் கலந்துகொண்டனா்.


 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT