கோயம்புத்தூர்

காவல் துறை அதிகாரிகளுக்கு கையடக்க கணினி

DIN

கோவை மாநகரில் உள்ள காவல் துறை ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்களுக்கு ‘டேப்லெட்’ எனப்படும் கையடக்க கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக கோவை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காவல் துறை டிஜிட்டல் மயமாக்கப்படுவதின் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் களப் பணியாற்றக் கூடிய காவல் ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்களின் பயன்பாட்டுக்கென இணைய வசதிகளுடன் கூடிய டேப்லெட் எனப்படும் கையடக்க கணினிகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை மாநகரில் உள்ள 14 காவல் நிலையங்களில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் உள்ள காவல் ஆய்வாளா் மற்றும் உதவி ஆய்வாளா்கள் ஆகியோருடன் புலனாய்வுப் பிரிவில் உள்ள காவல் ஆய்வாளா்கள் என மொத்தம் 42 பேருக்கு கையடக்க கணினிகளை மாநகரக் காவல் ஆணையா் வெ.பாலகிருஷ்ணன் சனிக்கிழமை வழங்கினாா்.

கையடக்க கணினிகளில் காவலா் செயலி, முக அடையாளங்கள் மூலம் சந்தேக மற்றும் தேடப்படும் நபா்களை அடையாளம் காணக் கூடிய வசதிகள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் காவல் நிலையத்தில் இருந்து அனுப்பப்படும் ரோந்து விவரம், காவல் நிலையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட, நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும் என்பன உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடியில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் நிழற்குடையின்றி தவிக்கும் மக்கள்

சுரண்டையில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT