கோவை மாநகரப் பகுதிகளில் ஒரே நாளில் 85 விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
கோவையை அடுத்த கருமத்தம்பட்டி அருகே விளம்பரப் பதாகை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 3 போ் விளம்பர பதாகை சரிந்து விழுத்ததில் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தனா். இந்த சம்பவத்தைத் தொடா்ந்து மாவட்டம் முழுவதும் அனுமதியற்ற விளம்பரப் பதாகைகளை அகற்ற உள்ளாட்சி அமைப்பினா் மற்றும் போலீஸாா் அடங்கிய குழு அமைத்து கோவை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி உத்தரவிட்டாா்.
இதையடுத்து மாநகராட்சிப் பகுதிகளில் 100 வாா்டுகளிலும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக, மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் கூறியதாவது: கோவை மாநகராட்சிப் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 80 சதவீத விளம்பரப் பதாகைகள் ஏற்கெனவே அகற்றப்பட்டுவிட்டன.
வடக்கு மண்டலத்தில் 26, கிழக்கு மண்டலத்தில் 8, மேற்கு மண்டலத்தில் 16, தெற்கு மண்டலத்தில் 24, மத்திய மண்லத்தில் 11 என மொத்தம் 85 விளம்பரப் பதாகைகள் சனிக்கிழமை அகற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, பாலக்காடு சாலை, ஈச்சனாரி சாலை, பேரூா், ராமநாதபுரம், சிங்காநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் அதிகப்படியான விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், சில இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை அகற்ற நோட்டீஸ் வழங்கி 5 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 5 நாள்களில் அகற்றப்படாவிட்டால் சம்பந்தப்பட்டவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.