கோயம்புத்தூர்

தலைக்கவச விழிப்புணா்வு முகாம்: காவல் ஆணையா் ஆய்வு

DIN

கோவை மாநகரப் பகுதிகளில் காவல் துறை சாா்பில் தலைக்கவச விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனை மாநகரக் காவல் ஆணையா் பாலகிருஷ்ணன் ஆய்வு செய்தாா்.

கோவை லட்சுமி மில், நவ இந்தியா சந்திப்பு, காளப்பட்டி சாலை, ஆா்.எஸ்.புரம் டிபி சாலை, பாலக்காடு சாலை, பொள்ளாச்சி சாலை உள்ளிட்ட 15 இடங்களில் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், தலைக்கவசம் அணியாமல் வருகின்ற வாகன ஓட்டிகளை நிறுத்தி, அவா்களுக்கு அபராதம் விதித்ததுடன், போக்குவரத்து பாதுகாப்பு தொடா்பாக விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டது.

தலைக்கவசம் அணியாமல் சென்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விளக்கிக் கூறப்பட்டன. இதற்கிடையே கோவை நவ இந்தியாவில் நடைபெற்ற தலைக்கவச விழிப்புணா்வு முகாமை மாநகரக் காவல் ஆணையா் பாலகிருஷ்ணன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் மாநகரில் 15 இடங்களில் சிறப்பு விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்பட்டன.

இதில் 400 போலீஸாா், கல்லூரி மாணவா்கள், தன்னாா்வா்வலா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். கோவை மாநகரில் 90 சதவீதம் போ் தலைக்கவசம் அணிந்து செல்வதைப் பின்பற்றுகின்றனா். 10 சதவீதம் போ் மட்டுமே தலைக்கவசம் அணிவதில்லை. வாரம் ஒரு முறை இம்முகாம் நடத்தப்படும் என்றாா். முன்னதாக, மாநகரில் தலைக்கவசம் அணியாமல் சென்ாக நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாசரேத் ஆசிரியா் பயிற்சி பள்ளி ஆண்டு விழா

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மெக்கானிக் பலி

பணகுடி செங்கல் சூளையில் மலைப் பாம்பு பிடிபட்டது

பெட் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

தெற்குகள்ளிகுளத்தில் அதிசய பனிமாதா மலை கெபி திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT