வால்பாறையை அடுத்த நெடுங்குன்று செட்டில்மெண்டில் சோலையாறு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
வால்பாறையை அடுத்த வில்லோனி எஸ்டேட் அருகில் உள்ள நெடுங்குன்று செட்டில்மெண்ட் பகுதிக்கு சோலையாறு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினா் மருத்துவா் பாபு லஷ்மணன் தலைமையில் வியாழக்கிழமை சென்றனா். இவா்கள் அங்கு வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை, உடல் பரிசோதனை உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் மேற்கொண்டனா். நோய் கண்டறியப்பட்டவா்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டன. மேல் சிகிச்சை தேவைப்படுவோரிடம் சுகாதார நிலையம் வந்து சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தினா்.