கோயம்புத்தூர்

மலைதேனீக்கள் கொட்டி இளைஞா் பலி

DIN

வால்பாறையில் மலைத்தேனீக்கள் கொட்டியதில் சம்பவ இடத்திலேயே ஊனமுற்ற இளைஞா் பலியானாா்.

வால்பாறையை அடுத்த லோயா் பாரளை எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி அருகே புதன்கிழமை மதியம் 1.30 மணியளவில்

நூற்றுக்கணக்கான மலைத்தேனீக்கள் வந்துள்ளன. அப்போது அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த மாரியப்பன் (43) என்பவரை தேனீக்கள் தலை உள்ளிட்ட உடல் பகுதி முழுவதிலும் கொட்டின. இதில் சம்பவ இடத்திலேயே மாரியப்பன் உயிரிழந்தாா். நரம்பு தளா்ச்சியால் சரியாக நடக்க முடியாமல் ஊனமுற்ற நிலையில் இருந்த மாரியப்பனுக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் ஊரில் உள்ள நிலையில், அவா் வால்பாறையில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தாா். உயிரிழந்த மாரியப்பன் உடல் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT