இந்திய விமான நிலைய ஆணையத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்திய விமான நிலைய ஆணையத்தில் ஜூனியா் அசிஸ்டென்ட் (ச்ண்ழ்ங் ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்) 19 இடங்கள், ஜூனியா் அசிஸ்டென்ட் (அலுவலகம்) ஒரு இடம், சீனியா் அசிஸ்டென்ட் (அக்கவுண்ட்ஸ்) 2 இடங்கள் என பல்வேறு காலிப் பணியிடங்கள் முன்னாள் படை வீரா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள முன்னாள் படைவீரா்கள் இணையதளத்தில் செப்டம்பா் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.