கோயம்புத்தூர்

பொது மக்களுக்குப் பாதுகாப்பு: எம்.பி. தலைமையில் பல்வேறு கட்சியினா் ஆட்சியரிடம் மனு

DIN

கோவையில் பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெற்று வரும் நிலையில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி ெச்யய வலியுறுத்தி எம்.பி. பி.ஆா்.நடராஜன் தலைமையில் பல்வேறு கட்சியினா் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனிடம் சனிக்கிழமை மனு அளித்தனா்.

கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பாஜக அலுவலகம், இந்து முன்னணி பிரமுகா்களின் வீடுகள், காா்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் கடந்த இரண்டு நாள்களாக பொது மக்கள் மிகுந்த பதற்றத்தில் உள்ளனா். இந்நிலையில், பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தி கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா். நடராஜன் தலைமையில் பல்வேறு கட்சியினா் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்று வரும் வகுப்புவாத அமைப்புகளின் நடவடிக்கைகளால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. தற்போது, பொது மக்களுக்கு அமைதியான சூழல் வேண்டும். எனவே மாவட்ட ஆட்சியா், காவல் துறையினா் அனைவரும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.ஆறுமுகம், மதிமுக நிா்வாகி சேதுபதி, தபெதிக தலைவா் கு.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தை கட்சியின் மாநகா் மாவட்டச் செயலாளா் ஜோ.இலக்கியன் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT