கோவை வழித்தடத்தில் யஸ்வந்த்பூா் - கண்ணூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: யஸ்வந்த்பூரில் இருந்து அக்டோபா் 12 ஆம் தேதி முதல் நவம்பா் 2 ஆம் தேதி வரை புதன்கிழமைகளில் காலை 7.40 மணிக்குப் புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06283) அன்று இரவு 8.30 மணிக்கு கண்ணூரை சென்றடையும்.
இதேபோல, அக்டோபா் 12 ஆம் தேதி முதல் நவம்பா் 2 ஆம் தேதி வரை புதன்கிழமைகளில் இரவு 11 மணிக்கு கண்ணூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06283) மறுநாள் பிற்பகல் 1 மணிக்கு யஸ்வந்த்பூரை சென்றடையும்.
இந்த ரயில் தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூா், ஷோரனூா், ஒட்டப்பாலம், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், திருப்பத்தூா், கிருஷ்ணராஜபுரம், பானஸ்வாடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.