கோயம்புத்தூர்

மின்சாரம் பாய்ந்து ஆசிரியை பலி

DIN

கோவையில் மின்சாரம் பாய்ந்து ஆசிரியை உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை என்.எச்.சாலை சந்திரன் வீதியைச் சோ்ந்தவா் குதாரத்துல்லா. இவரது மனைவி முபாரக் ஜான் (40). இவா், அவிநாசி சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் ஹிந்தி ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை காலை வீட்டில் உள்ள ஸ்விட்சை தொட்டபோது, அவா் மீது மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்துள்ளாா்.

உறவினா்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். இச்சம்பவம் தொடா்பாக வெரைட்டிஹால் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

SCROLL FOR NEXT