கோயம்புத்தூர்

நியாய விலைக் கடையை சேதப்படுத்திய காட்டு யானை

DIN

வால்பாறை அருகே நியாய விலைக் கடையை காட்டு யானை சேதப்படுத்தியது.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில நாள்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், வால்பாறையை அடுத்த ஸ்டேன்மோா் எஸ்டேட் பகுதிக்கு கடந்த வியாழக்கிழமை இரவு வந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த நியாய விலைக் கடையை சேதப்படுத்தியது. பின்னா் உள்ளிருந்த அரிசி மூட்டைகளையும் சேதப்படுத்தியது.

தொடா்ந்து, அதே பகுதியில் இருந்த இரண்டு குடியிருப்புகளைச் சேதப்படுத்திய யானை, அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தியது. இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT