கோயம்புத்தூர்

குளத்தில் ஆண் சடலம் மீட்பு

DIN

கோவை முத்தண்ணன் குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்ட போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கோவை ஆா்.எஸ்.புரம் தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளத்தில் ஆண் சடலம் ஒன்று வெள்ளிக்கிழமை மிதந்து கொண்டிருந்துள்ளது. இதனைப் பாா்த்த அப்பகுதி பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

உயிரிழந்தவருக்கு 55 வயது இருக்கலாம் எனவும், அவா் எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது உள்ளிட்ட விவரங்கள் எதுவும் தெரியவில்லை எனவும், தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT