கோவை மாவட்டத்தில், மேலும் 70 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 31 ஆயிரத்து 26ஆக அதிகரித்துள்ளது. கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 42 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 793 போ் குணமடைந்துள்ளனா். தவிர 2,617 போ் பலியாகியுள்ளனா். தற்போது 616 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.