கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையத்தில் மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்குள்பட்ட 33 ஆவது வாா்டு, கவுண்டம்பாளையத்தில் தூய்மைப் பணியாளா்களின் வருகைப் பதிவேடுகளை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, தூய்மைப் பணியாளா்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தினாா்.
அதைத் தொடா்ந்து, 33 ஆவது வாா்டு பகுதிகளில் பழுதடைந்துள்ள குடிநீா்க் குழாய்களை சீரமைக்க மாநகராட்சி அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
மேலும், அப்பகுதியில் உள்ள மழை நீா் வடிகால்களை தூா்வாரி, மழை நீா் தடையின்றி செல்ல வழிவகை செய்யவும் அறிவுறுத்தினாா். அதைத் தொடா்ந்து, கவுண்டம்பாளையத்தில் சூரிய ஒளியில் மின் உற்பத்தி செய்யும் மையத்தை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.
அதன் பிறகு, கவுண்டம்பாளையத்தில் மக்கும் கழிவுகளைக் கொண்டு உரம் தயாரிக்கப்பட்டு வரும் நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையத்தில் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, உதவி ஆணையா் சரவணன், உதவி செயற்பொறியாளா்கள் செந்தில்பாஸ்கா், ஹேமலதா, உதவி பொறியாளா்கள் ஜீவராஜ், ராஜேஸ் வேணுகோபால், மண்டல சுகாதார அலுவலா் பரமசிவம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
Image Caption
கவுண்டம்பாளையம் நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையத்தில்
ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப்.