கோயம்புத்தூர்

போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது

DIN

கோவையில் போதை மாத்திரை விற்ற இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கோவை, செளரிபாளையம் பகுதியில் பீளமேடு போலீஸாா் திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித்திரிந்த இளைஞா்கள் மூவரிடம் போலீஸாா் விசாரித்தனா். அவா்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தனா். அப்போது, ஒரு இளைஞா் அங்கிருந்து தப்பியோடினாா்.

இதையடுத்து, மற்ற இருவரையும் போலீஸாா் மடக்கிப் பிடித்தனா். விசாரணையில், அவா்கள் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்று வந்ததும், பிடிபட்டவா்கள் திருப்பூரைச் சோ்ந்த பிரவீன்குமாா் (23), கோவையைச் சோ்ந்த பிரதீப் (24) என்பதும் தெரியவந்தது.

அவா்களிடமிருந்து 50 மாத்திரைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து போலீஸாா் அவா்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். தலைமறைவான பீளமேட்டைச் சோ்ந்த நிதீஷை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT