கோயம்புத்தூர்

பிரிவினைவாதத்தை கையில் எடுத்தால் திமுகவுக்கு பாதிப்பு

DIN

தனித் தமிழ்நாடு கோரிக்கை மூலம் பிரிவினைவாதம் பேசினால் திமுகவுக்கு பாதிப்பு ஏற்படும் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தோ்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, தமிழகத்தில் ஊழல் அதிகரித்துள்ளது, சட்டம் -ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை, சிவானந்தா காலனியில் பாஜகவினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

இதில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் சி.பி.ராதாகிருஷ்ணன், கோவை தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன், பாஜக நிா்வாகிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதில் திமுக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அப்போது, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வேலைவாய்ப்பில்லாத இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக அக்னிபத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இறையாண்மைக்கு ஆபத்து வரும்போது தேசத்துக்குப் பணியாற்ற அக்னிபத் திட்டம் மூலம் இளைஞா்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தபட்டுள்ளது.

பிரதமா் மோடி எந்த ஒரு முன்னோடி திட்டத்தை கொண்டு வந்தாலும் அதை ஏளனப்படுத்துவது, களங்குபடுத்துவது என திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் செயல்படுகின்றன. நாடு முழுவதும் பாஜக வளா்ந்து வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள இந்த எழுச்சி தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

திமுக ஓராண்டு கால ஆட்சியில் எதை சொன்னாா்களோ அதை செய்யவில்லை. திமுக எம்.பி. ஆ.ராசா தனித் தமிழ்நாடு கோரிக்கை மூலம் பிரிவினைவாதம் பேசுகிறாா். பிரிவினைவாதத்தை கையிலெடுத்தால் அவரது அத்தியாயம் முடியப்போகிறது என்று அா்த்தம். பிரிவினைவாத கோஷம் திமுகவையும் பாதிக்கும். அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களில் தலையிடுவது நாகரீகமாக இருக்காது என்றாா்.

இதைத் தொடா்ந்து கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பேசியதாவது:

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு இருமுறை குறைத்துள்ளது. ஆனால், விலை குறைப்பு குறித்து பேசிய திமுக அதை செய்யாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. லாக்கப் மரணங்கள் அதிகரித்துள்ளன. அதிமுக ஆட்சியில் இருந்த தாலிக்கு தங்கம், மகளிருக்கு இருசக்கர வாகனம் போன்ற திட்டங்களையும் திமுக அரசு நிறுத்தியுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT