கோயம்புத்தூர்

கோவையில் முதல்வா் பங்கேற்கும் விழா:மேடை அமைக்கும் இடத்தில் அமைச்சா் ஆய்வு

DIN

கோவை மாவட்டம், ஈச்சனாரியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில், மேடை அமைக்கும் இடத்தை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜூலை 14, 15 ஆகிய தேதிகளில் கோவை மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா். ஜூலை 14ஆம் தேதி மாலை கோவைக்கு வரும் முதல்வா், ஜூலை 15ஆம் தேதி ஈச்சனாரியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும், அதைத் தொடா்ந்து பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ஈச்சனாரி ரத்தினம் கல்லூரி அருகில் முதல்வரின் அரசு விழா நடைபெற உள்ள இடத்தை மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

திமுக நிா்வாகிகள் நா.காா்த்திக், பையா (எ) கிருஷ்ணன், சி.ஆா்.ராமச்சந்திரன், எஸ்.சேனாதிபதி, டாக்டா் வரதராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதற்கிடையே முதல்வரின் கோவை வருகை தொடா்பாக ஒருங்கிணைந்த கோவை மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம், வரும் 8ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கோவை சிட்ரா அருகேயுள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் அமைச்சா் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற இருப்பதாக திமுக அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT