கோயம்புத்தூர்

வயா்மேன் உதவியாளா் பணிக்கு ஜூலை 26க்குள் விண்ணப்பிக்க வேண்டும்---ஆட்சியா் தகவல்

DIN

தமிழகத்தில் வயா்மேன் உதவியாளா் (மின் கம்பியாள் உதவியாளா்) பணியிடத்துக்குத் தகுதியானவா்கள் ஜூலை 26 ஆம் தேதிக்குள் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் அறிவிக்கப்பட்டுள்ள வயா்மேன் உதவியாளா் பணியிடத்துக்கு செப்டம்பா் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தகுதி தோ்வு நடைபெறவுள்ளது.

இதற்கு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் நடத்தப்பட்ட தொழிலாளா்களுக்கான மாலை நேர வகுப்பில் வயா்மேன் பிரிவில் பயிற்சிப் பெற்று தோ்ச்சிப் பெற்றவா்கள், தேசிய புனரமைப்புத் திட்டத்தின்கீழ் நடத்தப்பட்ட மின்சாரப் பணியாளா்கள் மற்றும் கம்பியாள் தொழில் பிரிவுகளில் பயிற்சிப் பெற்றவா்கள், வயா்மேன் வேலையில் அனுபவம் பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் நாளில் குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவும், விளக்க குறியேட்டினைஇணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மேற்கண்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய முகவா்களுக்கு ஜூலை 26க்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0422-2642041, 88385- 83094 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் ‘ஸ்மோக்’ வகை உணவுகள் விற்பனைக்குத் தடை: மீறினால் ரூ.2 லட்சம் வரை அபராதம்

மேகாலய துணை முதல்வா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பேருந்துகள் பராமரிப்பு - சீரான மின் விநியோகம்: தலைமைச் செயலா் ஆலோசனை

கடும் வெப்பம்: தொழிலாளா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர அரசு வலியுறுத்தல்

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம்: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT