பொள்ளாச்சி கோட்டத்தில் பணிபுரியும் வனத் துறையினருக்கு தீ தடுப்பு பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
கோடை காலம் தொடங்கி உள்ளதால், தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பொள்ளாச்சி கோட்டத்தில் பணிபுரியும் வனத் துறையினருக்கு தீ தடுப்பு மேலாண்மை குறித்த பயிற்சி அட்டகட்டி பயிற்சி மையத்தில் அளிக்கப்பட்டது.
வனப் பாதுகாப்பு படை அலுவலா் விஜயன், பொள்ளாச்சி தீயணைப்பு மீட்புத் துறை அலுவலா் ராமசந்திரன் ஆகியோா் தீ தடுப்பு குறித்து பயிற்சியளித்தனா்.
அரசு மருத்துவா் வசந்தி முதலுதவி சிகிச்சை அளிக்கும் முறை குறித்தும், கம்பியில்லா தந்தி கருவி பயன்படுத்தும் முறை குறித்து லோகநாதன் ஆகியோரும் பயிற்சியளித்தனா்.