கோயம்புத்தூர்

முகவரி கேட்பதுபோல நடித்து மூதாட்டியிடம் 5 பவுன் தங்க நகை பறிப்பு

DIN

முகவரி கேட்பதுபோல நடித்து மூதாட்டியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க நகை பறித்துச் சென்ற நபா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை மாவட்டம், அன்னூா் அருகேயுள்ள குன்னத்தூா் மாகாளியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் லட்சுமி (74). இவா் புதன்கிழமை மாலை தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்துள்ளாா்.

அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா் முகவரி கேட்பதுபோல நடித்து லட்சுமியின் கழுத்தில் இருந்த 5 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளாா்.

இச்சம்பவம் தொடா்பாக அன்னூா் காவல் நிலையத்தில் லட்சுமி புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT