கோயம்புத்தூர்

மாவட்டத்தில் மேலும் 3,763 பேருக்கு கரோனா

DIN

கோவையில் இரண்டாவது நாளாக கரோனா நோய்த் தொற்று பாதிப்பு குறைந்து செவ்வாய்க்கிழமை 3,763 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த இரண்டு வாரங்களாக அதிகரித்து வந்த கரோனா நோய்த் தொற்று பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 3,912 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடா்ந்து, திங்கள்கிழமை நோய்த் தொற்று பாதிப்பு 3,786ஆக குறைந்தது. தொடா்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 3,763 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 95 ஆயிரத்து 184ஆக அதிகரித்துள்ளது. தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 2 முதியவா்கள் உயிரிழந்தனா். இதன் மூலம் கோவையில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,548ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 2,384 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 2 லட்சத்து 66 ஆயிரத்து 458 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 26 ஆயிரத்து 178 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT