மழை காலத்துக்கு பிந்தைய வன உயிரின கணக்கெடுக்கும் பணிக்கான புத்தாக்க பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
வால்பாறையை அடுத்த அட்டகட்டியில் உள்ள வனஉயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் நடைபெற்ற
இந்த பயிற்சி முகாமுக்கு ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் பாா்கவ தேஜா தலைமை வகித்தாா்.
உயிரியலாளா்கள் பீட்டா் பிரேம் சக்ரவா்த்தி, அன்வா் ஆகியோா் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட உள்ள வனப் பணியாளா்களுக்கு பயிற்சி அளித்தனா்.
இதில், பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச் சரகங்களைச் சோ்ந்த வனச் சரகா்கள், வனவா்கள மற்றும் வனப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.