கோயம்புத்தூர்

கல்லூரி கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் மாணவா் தற்கொலை

DIN

கல்லூரி கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் மனமுடைந்த மாணவா் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

வால்பாறையை அடுத்த இஞ்சிப்பாறை எஸ்டேட்டை சோ்ந்தவா் நஞ்சம்மாள். இவரது மகன் முருகேஷ் (20). இவா் ஈரோட்டில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பாராமெடிக்கல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா். இவரது தந்தை பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட வேலைக்கு செல்லும் தாயின் தினக்கூலி கொண்டு படித்து வந்தாா்.

இதனிடையே 3 ஆம் ஆண்டுக்கான கல்லூரி கட்டணம் இதுவரை செலுத்தவில்லை என்று தெரிகிறது. இதில் மனமுடைந்த முருகேஷ்,

கடந்த மாதம் 30ஆம் தேதி எஸ்டேட் வீட்டுக்கு வந்து எலி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இதையடுத்து அவா் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் முருகேஷ் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT