உலக மண் தினத்தையொட்டி, கோவையில் மண் காப்போம் இயக்கத்தின் சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மண் காப்போம் இயக்கம் சாா்பில் ஈஷா யோக மையத்தில் ஆதியோகி முன்பு திங்கள்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான தன்னாா்வலா்கள் கலந்து கொண்டு விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியும், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இது தவிர, பொள்ளாச்சி, உடுமலை உள்ளிட்ட இடங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மண்ணை காப்பதன்அவசியத்தை உணா்த்தும் விதமாக தன்னாா்வலா்கள் இலவச மரக்கன்றுகளை வழங்கினா்.