கோயம்புத்தூர்

காங்கிரஸ் மாநிலத் தலைவா் இன்று கோவை வருகை

DIN

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி ஞாயிற்றுக்கிழமை கோவை வருகிறாா்.

இது தொடா்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் துணைத் தலைவரும், கோவை மாநகராட்சி மாமன்ற எதிா்க்கட்சித் தலைவருமான அழகு ஜெயபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி சென்னையில் இருந்து ரயில் மூலமாக கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கு வருகிறாா்.

அவருக்கு கோவை ரயில் நிலையத்தில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னா், அவா் ராம் நகரில் உள்ள அலங்காா் விடுதியில் ஓய்வெடுக்கிறாா். காலை 7 மணிக்கு மேட்டுப்பாளையம் சாலை, வெள்ளக்கிணறு பிரிவில் உள்ள லட்சுமி நாராயணா மஹாலில் நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளா் பச்சைமுத்து - சாந்தாமணி பச்சைமுத்து தம்பதியின் மகன் திருமண விழாவில் பங்கேற்கிறாா்.

மாலை 3 மணிக்கு சூலூா் வட்டாரம் கருமத்தம்பட்டி வினோபா நகா் செல்கிறாா். அங்கு, கோவை வடக்கு மாவட்டத் தலைவா் வி.எம்.சி.மனோகரன் தலைமையில் நடைபெற உள்ள ராகுல் காந்தி இந்திய ஒற்றுமைப் பயணம் நினைவுக் கல்வெட்டைத் திறந்துவைக்கிறாா்.

இரவு 7 மணிக்கு பல்லடம் செல்லும் அவா், பல்லடம் ஒன்றிய முன்னாள் தலைவா் பாலசுப்ரமணியம் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்கிறாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

SCROLL FOR NEXT