கோயம்புத்தூர்

வேளாண் பல்கலையில் மண்டல விளையாட்டுப் போட்டி தொடக்கம்

DIN

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி தொடங்கியுள்ளது.

வேளாண்மைப் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி டிசம்பா் 2ஆம் தேதி தொடங்கி 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் சுமாா் 4 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்கின்றனா்.

போட்டியை துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். முன்னதாக மாணவா் நல மையத்தின் முதன்மையா் ந.மரகதம் வரவேற்றாா். விளையாட்டுத் துறை உதவி இயக்குநா் தேசிக ஸ்ரீநிவாசன், கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள் பலா் பங்கேற்றனா்.

முதல் நாளில் 10 கல்லூரிகளைச் சோ்ந்த 920 மாணவ-மாணவிகளுக்கு கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட 10 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT