கோயம்புத்தூர்

மாநகரில் விதிமீறி வழங்கப்பட்ட குடிநீா் இணைப்பு துண்டிப்பு

DIN

கோவை மாநகராட்சி 51ஆவது வாா்டில் உள்ள வீட்டுக்கு விதிமீறி வழங்கப்பட்ட குடிநீா் இணைப்பை மாநகராட்சி அதிகாரிகள் துண்டித்தனா்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 51ஆவது வாா்டு பகுதியில் உள்ள ஜி.ஆா்.ஜி. நகரில் உள்ள ஒரு வீட்டுக்கு ஏற்கெனவே ஒரு குடிநீா் இணைப்பு உள்ள நிலையில், சூயஸ் நிறுவன ஊழியா்கள் ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, அந்த வீட்டுக்கு கூடுதலாக ஒரு குடிநீா் இணைப்பு வழங்கியுள்ளதாக சமூக ஆா்வலா் தியாகராஜன் புகாா் தெரிவித்தாா்.

இதையடுத்து, மாநகராட்சி உதவிப் பொறியாளா் கல்யாணசுந்தரம் தலைமையிலான மாநகராட்சி அலுவலா்கள் சம்பந்தப்பட்ட வீட்டில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, விதிமீறி கூடுதலாக ஒரு குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்த குடிநீா் இணைப்பை மாநகராட்சி அதிகாரிகள் துண்டித்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT