கோவையில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை கிணத்துக்கடவு அரிசிபாளையம் பிரிவைச் சோ்ந்தவா் சுப்பிரமணி. இவரது மனைவி சரஸ்வதி (60), கூலி தொழிலாளி. இவா் வெங்கிடாபுரத்தில் இருந்து பேருந்தில் டவுன்ஹாலுக்கு வியாழக்கிழமை வந்துள்ளாா்.
அப்போது, பேருந்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, மா்ம நபா் சரஸ்வதி அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச்சென்றுள்ளாா்.
இது தொடா்பாக, உக்கடம் காவல் நிலையத்தில் சரஸ்வதி புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.