கோவை மாவட்டத்தில் மேலும் 107 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 37 ஆயிரத்து 52ஆக அதிகரித்துள்ளது. கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 151 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 33 ஆயிரத்து 566 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தவிர 2,618 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 868 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.