திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பெண்ணிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கத்தின் மருமகன் அருண்பிரகாஷை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கோவை, காளப்பட்டியைச் சோ்ந்தவா் தொழிலதிபா் சிந்துஜா. இவா், சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் அளித்தப் புகாரில், முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கத்தின் மருமகன் அருண் பிரகாஷ் தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றி ரூ. 7 கோடி பணம் மோசடி செய்ததாகக் குறிப்பிட்டிருந்தாா்.
இதனடிப்படையில் அருண் பிரகாஷ் உள்பட மூவா் மீது கோவை கிழக்கு மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.
இந்நிலையில் சிந்துஜாவின் தந்தை செங்குட்டுவனிடம் அருண்பிரகாஷ் ரூ.1.5 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த கோவை குற்றப் பிரிவு போலீஸாா், அருண் பிரகாஷை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.