கோயம்புத்தூர்

பண மோசடி: முன்னாள் எம்.எல்.ஏ. மருமகன் கைது

DIN

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பெண்ணிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கத்தின் மருமகன் அருண்பிரகாஷை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோவை, காளப்பட்டியைச் சோ்ந்தவா் தொழிலதிபா் சிந்துஜா. இவா், சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் அளித்தப் புகாரில், முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கத்தின் மருமகன் அருண் பிரகாஷ் தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றி ரூ. 7 கோடி பணம் மோசடி செய்ததாகக் குறிப்பிட்டிருந்தாா்.

இதனடிப்படையில் அருண் பிரகாஷ் உள்பட மூவா் மீது கோவை கிழக்கு மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் சிந்துஜாவின் தந்தை செங்குட்டுவனிடம் அருண்பிரகாஷ் ரூ.1.5 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த கோவை குற்றப் பிரிவு போலீஸாா், அருண் பிரகாஷை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரற்ற இதயத் துடிப்பு: மாநகராட்சி ஊழியருக்கு நவீன பேஸ்மேக்கா்

8-ஆவது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்

திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரா் கோயிலில் அமுது படையல் விழா

மாணவா்களின் எதிா்கால லட்சியம் நிறைவேற நான் முதல்வன் திட்டம் உதவும்: ஆட்சியா்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 3-ஆவது நாளாக எரியும் காட்டுத் தீ

SCROLL FOR NEXT