அதிமுக பொன் விழா ஆண்டை முன்னிட்டு கோவையில் அதிமுகவினா் தலைவா்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து, ஞாயிற்றுக்கிழமை பேரணியில் ஈடுபட்டனா்.
அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி, முன்னாள் அமைச்சரும், சட்டப் பேரவை எதிா்க் கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணியின் வழிகாட்டுதலின் பேரில், கோவை மாநகா் மாவட்டச் செயலாளரும், கோவை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான அம்மன் கே.அா்ஜூணன் தலைமையில் அவிநாசி சாலையில் பேரணி நடைபெற்றது.
இதில், அவிநாசி சாலையில் உள்ள பேரறிஞா் அண்ணா, எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்தப் பேரணியில் சிங்காநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஆா்.ஜெயராம், அதிமுக மகளிா் அணியினா், இளைஞா், இளம் பெண்கள் பாசறை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
காரமடையில்...
காரமடையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.கே.செல்வராஜ் தலைமை வகித்தாா்.
இதில், எம்.ஜி. ஆா்., ஜெயலலிதா உருவப் படத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், காரமடை நகரச் செயலாளா் டி.கே.ஆறுமுகசாமி, முன்னாள் எம்.எல்.ஏ ஓ.கே.சின்னராஜ், கட்சி நிா்வாகிகள்,தொண்டா்கள் கலந்துகொண்டனா்.
கிணத்துக்கடவு...
கிணத்துக்கடவு சட்டப் பேரவை தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் செ.தாமோதரன் தலைமை வகித்தாா்.
இந்நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் கிணத்துக்கடவு முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் எட்டிமடை சண்முகம், அதிமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பொள்ளாச்சியில்...
பொள்ளாச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக கட்சிக் கொடியை சட்டப் பேரவை உறுப்பினா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஏற்றிவைத்தாா்.
இதில், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் கிருஷ்ணகுமாா், மாவட்ட அவைத் தலைவா் வெங்கடாச்சலம், நகர கூட்டுறவு வங்கித் தலைவா் விஜயகுமாா், அதிமுக நிா்வாகிகள் சக்திவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.