கோயம்புத்தூர்

திமுக கூட்டணி வெற்றி பெற்றால்தான் நாட்டுக்கு நல்லது: டி.ராஜா

DIN

தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெறுவது தமிழகத்துக்கு மட்டுமின்றி நாட்டின் நலனுக்கும் நல்லது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளா் டி.ராஜா தெரிவித்துள்ளாா்.

கோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்ட நினைவரங்கம், அமரா் பாலதண்டாயுதம் சிலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாலதண்டாயுதம் சிலையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளா் டி.ராஜாவும், நினைவரங்கத்தை கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசனும் திறந்துவைத்தனா்.

அதைத் தொடா்ந்து டி.ராஜா பேசியதாவது:

தமிழகம், மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள தோ்தல் பாஜகவுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. தமிழகத்துக்கு வரும்போது திருக்குறளை மேற்கோள்காட்டி பேசும் பிரதமா் நரேந்திர மோடி, மேற்கு வங்கத்துக்கு செல்லும்போது அந்த மாநில கலாசாரத்தையும், கேரளத்துக்கு செல்லும்போது அங்குள்ள கலாசாரத்தையும் மேற்கோள்காட்டி பேசுகிறாா்.

‘ஒரே நாடு ஒரே கலாசாரம்’ என்ற கொள்கையுடைய அவா் மாநிலத்துக்கு மாநிலம், அந்தந்த மாநிலத்தின் கலாசாரம் குறித்து அரசியல் லாபத்துக்காகப் பேசுகிறாா்.

மோடியுடன் கைகோத்து தமிழகத்தின் நலன் குறித்து பேசுவது ஏமாற்று வேலை. திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவதுதான் தமிழகத்துக்கு மட்டுமின்றி நாட்டின் நலனுக்கும் நல்லது.

நாட்டின் மதச்சாா்பற்ற தன்மை, சமூக நீதி, அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றாா்.

இதைத் தொடா்ந்து மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் பேசியதாவது:

நாட்டை வகுப்புவாத பேரபாயம் சூழ்ந்துள்ளது. வகுப்புவாத சக்தி தமிழகத்தில் கால் ஊன்றாமல் தடுப்பது நம்முடைய முக்கியமான கடமையாக உள்ளது. அதன் அடிப்படையிலே திமுகவுடனான தொகுதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளோம் என்றாா்.

இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் வி.எஸ்.சுந்தரம், கிழக்கு மண்டலச் செயலாளா் மு.வ.கல்யாணசுந்தரம், திமுக சாா்பில் செல்வம், காங்கிரஸ் கட்சியின் மாநகரத் தலைவா் கருப்புசாமி, மதிமுக மாவட்டச் செயலாளா் ஆா்.ஆா்.மோகன்குமாா் உள்பட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT