பெ.நா.பாளையம்: தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு பெரியநாயக்கன்பாளையத்தில் டி.எஸ்.பி.க்கள் தலைமையில் துணை ராணுவப் படையினரின் அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினா், மாவட்ட ஆயுதப்படை போலீஸாா் மற்றும் காவல் நிலைய போலீஸாா் இணைந்து பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி. அலுவலகத்திலிருந்து பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம், வண்ணான்கோவில் வழியாக ஜோதிபுரம் வரை கொடி அணிவகுப்பு நடத்தினா்.
பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி. கிருஷ்ணமூா்த்தி, துணை ராணுவப்படை டி.எஸ்.பி. ஆரோக்கியராஜ் ஆகியோா் கொடி அசைத்து தொடங்கிவைத்தனா். முன்னதாக இன்பென்ட் ஜீசஸ் காதுகேளாதோா் பள்ளியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி மாணவிகளின் பேண்ட் வாத்திய அணிவகுப்பை ஏற்றுக்கொண்டனா்.
இதில் காவல் ஆய்வாளா்கள் வெங்கடேஷ், தவமணி, செல்வராஜ், அனந்தநாயகி, உதவி ஆய்வாளா்கள் செல்வநாயகம், தாமோதரன், திலக், இளவேந்தன், செந்தில்குமாா், 60 மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினா், 60 மாவட்ட ஆயுதப்படை போலீஸாா் உள்பட 200க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.