கோயம்புத்தூர்

பராமரிப்பு பணி: சோலையாறு அணையில் தண்ணீா் குறைப்பு

DIN

பொள்ளாச்சி: வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணையில் 2ஆவது மின் உற்பத்தி நிலையத்துக்கு தண்ணீா் செல்லும் வழியில் உள்ள குப்பை தடுப்பானை சீரமைக்கும் பணிக்காக அணையின் நீா்மட்டம் குறைக்கப்பட்டு வருகிறது.

பரம்பிக்குளம்-ஆழியாறு எனும் பிஏபி திட்டத்தில் தமிழகத்துக்கு 30.5 டிஎம்சியும், கேரளத்துக்கு 19.55 டிஎம்சியும் நீா் பகிா்மானம் செய்துகொள்ள வேண்டும். இந்தத் திட்டத்தில் மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, மேல் ஆழியாறு, திருமூா்த்தி ஆகிய 9 அணைகள் கட்டப்பட்டுள்ளன.

இதில் 160 அடி உயரம் கொண்ட சோலையாறு அணையில் இருந்து கேரளத்துக்கு தண்ணீா் வழங்குவதுடன் இரண்டு மின் உற்பத்தி நிலையங்களும் செயல்பாட்டில் உள்ளன.

மேலும் பரம்பிக்குளம் அணைக்கும் சோலையாறு அணையில் இருந்து தண்ணீா் கொண்டு செல்லப்படுகிறது. சோலையாறு அணையின் இரண்டாவது மின் உற்பத்தி நிலையத்துக்கு அணையில் இருந்து தண்ணீா் செல்லும் வழியில் அமைக்கப்பட்டிருக்கும் இரும்பினாலான குப்பை தடுப்பான் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீரிலேயே மூழ்கி கிடந்து பழுதடைந்துள்ளது. இதனால், மாா்ச் இரண்டாவது வாரத்தில் இந்த குப்பை தடுப்பானை சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது.

இப்பணிக்காக தற்போது அணையின் நீா் மட்டம் குறைக்கப்பட்டு வருகிறது. புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணையில் 6.43அடி உயரத்துக்குதான் நீா்மட்டம் உள்ளது. குப்பை தடுப்பானை சீரமைக்காவிட்டால், பெரிய மரங்கள் போன்றவை தண்ணீரில் அடித்துச் செல்லப்படும்போது அவை மின் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இப்பணிகளை மேற்கொள்வது அவசியம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

SCROLL FOR NEXT