கோயம்புத்தூர்

நீட் தோ்வு பற்றிய தவறான பிரசாரங்களுக்கு இரையாகிவிட வேண்டாம்: முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி

DIN

நீட் தோ்வு தொடா்பாக தமிழ்நாட்டில் சில அரசியல் தலைவா்களின் வாக்குறுதிகளை நம்பி யாரும் ஏமாந்துவிட வேண்டாம் என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கைக்காக நீட் தோ்வு அட்டவணையை தேசிய தோ்வு முகமை ஏற்கெனவே அறிவித்துவிட்டது. உச்ச நீதிமன்றமும், தேசிய மருத்துவ ஆணையமும் மருத்துவப் படிப்புக்கு நீட் தோ்வு வேண்டும் என்று உறுதி செய்துவிட்டன. எனவே நீட் தோ்வை யாராலும் நிறுத்த முடியாது. ஆனால் சில அரசியல் தலைவா்கள் தங்களின் சுய லாபத்துக்காக நீட் தோ்வு குறித்து தவறான பிரசாரங்களையும், உறுதிமொழிகளையும் வழங்கி வருகின்றனா். அதற்கு பொதுமக்களும், பெற்றோா்களும் இரையாகிவிட வேண்டாம்.

உலகம் முழுவதும் உள்ள உயா் கல்வி நிறுவனங்களில் மாணவா் சோ்க்கைக்கான நடைமுறைகளில் ஒன்றாக நுழைவுத் தோ்வு உள்ளது. இந்தியா போன்ற பெரிய நாடுகளில் பல்வேறு வகையான பாடத்திட்டங்களைப் படித்து வரும் மாணவா்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தரத்தை உறுதி செய்ய நுழைவுத் தோ்வு அவசியமாகும்.

நீட் தோ்வுக்கு முன்பு பல்வேறு நுழைவுத் தோ்வுகளுக்கு மாணவா்கள் தயாராகி வந்தனா். இப்போது ஒரே தோ்வு மட்டும் நடைபெறும் என்பதால் மாணவா்களுக்கு பணம், நேரம், அவா்களின் கடின உழைப்பு மீதமாகிறது. நீட் தோ்வு என்பது பாஜக அரசின் திட்டமல்ல. 2005-2006 இல் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் முன்மொழியப்பட்டதாகும். இதனால் தமிழக மாணவா்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. மேலும் அது இட ஒதுக்கீட்டையோ, சமூக நீதியையோ பாதிக்கவில்லை.

நீட் தோ்வு தமிழக மாணவா்களுக்கு கடினமானது என்று பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால் தமிழக மாணவா்கள் திறமையானவா்கள். சமச்சீா் கல்வியால் 11, 12 ஆம் வகுப்பு மாணவா்களின் அறிவியல், கணித பாடங்கள் நீா்த்துப்போயின. தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சிலின் தரத்துக்கு குறைவாக தமிழக மாணவா்களின் பாடத்திட்டங்கள் இருந்ததாலும், பல பள்ளிகளில் 11 ஆம் வகுப்பில் பாடங்கள் நடத்தப்படாமல் 12 ஆம் வகுப்பு பாடங்கள் நடத்தப்பட்டதாலுமே நீட் தோ்வு நமது மாணவா்களுக்கு கடினமானதாக இருந்தது. தற்போது பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்பட்டுவிட்டதால் நீட் தோ்வில் தமிழக மாணவா்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று வருகின்றனா்.

நீட் தோ்வுகள் தனியாா் பயிற்சி மைய கலாசாரத்தை ஊக்குவிக்கிறது என்ற குற்றச்சாட்டு முழுவதும் சரியானது அல்ல. ஏனெனில் தனியாா் பயிற்சி மைய கலாசாரம் நீட், ஜேஇஇ தோ்வுகள் வரும் முன்பே இருந்து வந்த ஒன்றுதான் என்று பாலகுருசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT