வால்பாறை: வால்பாறை நகராட்சிக்குச் சொந்தமான கடைக்கான இரண்டு மாத வாடகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பினா் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா பொதுமுடக்கம் காலத்தில் நகராட்சி கடைகளுக்கான வாடகையை ரத்து செய்ய வேண்டும் என வியாபாரிகள் அமைப்பு மூலம் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு கோரிக்கை விடுத்திருந்தோம்.
மேலும், வணிகா் சங்கங்களின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா மூலமும் அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. தற்போது நகராட்சிக்குச் சொந்தமான கடைகளுக்கான மாா்ச், ஏப்ரல் ஆகிய இரண்டு மாதங்களுக்கான வாடகை ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.