கோவை அருகே கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோவை, கணபதி லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் ராஜன் (55). பெயிண்டா். இவா், கணபதியில் உள்ள ஒரு கட்டடத்தில் பெயிண்டிங் வேலையில் புதன்கிழமை மாலை ஈடுபட்டிருந்தாா். அப்போது கட்டடத்தில் இருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த ராஜனை அங்கிருந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.