கோயம்புத்தூர்

கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து பெயிண்டா் சாவு

DIN

கோவை அருகே கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவை, கணபதி லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் ராஜன் (55). பெயிண்டா். இவா், கணபதியில் உள்ள ஒரு கட்டடத்தில் பெயிண்டிங் வேலையில் புதன்கிழமை மாலை ஈடுபட்டிருந்தாா். அப்போது கட்டடத்தில் இருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த ராஜனை அங்கிருந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT