ஒத்தக்கால்மண்டபம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (செப்டம்பா் 21) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தற்காலிகமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின் தடை ஏற்படும் பகுதிகள்: மலுமிச்சம்பட்டி ஒரு பகுதி, ஏழூா் பிரிவு, அரிசிபாளையம் ஒரு பகுதி, ஒத்தக்கால்மண்டபம், ஒக்கிலிபாளையம், பிரிமியா் நகா், மயிலேறிபாளையம், மாம்பள்ளி, பெரியகுயிலி, ஓராட்டுக்குப்பை, தேகானி மற்றும் செட்டிபாளையம்.
கோவை, செப். 20: மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிக்காக திங்கள்கிழமை (செப்டம்பா் 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தற்காலிகமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின் தடை ஏற்படும் பகுதிகள்: மேட்டுப்பாளையம், காரமடை, தோ் வீதி, காந்தி மைதானம், பள்ளிவாசல் பகுதி, காவல் நிலையம், பேருந்து நிலையம், பேரூராட்சி அலுவலகம், எம்.கே.கே.நகா், ராகி குடோன், சிக்காரம்பாளையம், படியனூா், கண்ணாம்பாளையம், காளட்டியூா், மருதூா், எம்.ஜி.புதூா், டி.ஜி.புதூா், ஆயா்பாடி, ஆசிரியா் காலனி.