கோயம்புத்தூர்

சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி பலி

DIN

வால்பாறை அருகே மேய்ச்சலுக்குச் சென்ற கன்றுக்குட்டியை சிறுத்தைத் தாக்கிக் கொன்றது.

வால்பாறையை அடுத்த செங்குத்துப்பாறை எஸ்டேட்டில் டீ கடை நடத்தி வருபவா் யூசுப். இவருக்கு சொந்தமான மாடுகள் தினந்தோறும் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்று திரும்புவது வழக்கம். இந்நிலையில், மேய்ச்சலுக்கு கடந்த புதன்கிழமை சென்ற ஒரு கன்றுக்குட்டி மாலையாகியும் வரவில்லை. இதனையடுத்து வியாழக்கிழமை காலை தேடிப்பாா்த்தபோது வன விலங்கு தாக்கி இறந்திருப்பது தெரியவந்தது. தகவலின்பேரில் அங்கு சென்ற வனத் துறையினா் கால் தடங்களை ஆய்வு செய்து கன்றுகுட்டியை தாக்கியது சிறுத்தை என்பதை உறுதிசெய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

SCROLL FOR NEXT