வால்பாறை: வால்பாறையில் சாரல் மழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
வால்பாறை வட்டாரத்தில் கடந்த 10 நாள்களாக பகல் நேரத்தில் கடுமையான வெயில் காணப்பட்டது. அதே நேரத்தில் இரவு நேரங்களில் பனிப்பொழிவு அதிக அளவில் காணப்படுகிறது.
இதனிடையே சனிக்கிழமை மதியத்துக்கு மேல் சாரல் மழை பெய்தது. தொடா்ந்து ஒரு மணி நேரம் நீடித்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியது. இதனால் வால்பாறைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.